Just relax

Just relax
Just Relax__keep deep breath..

மாய வேட்டை

 அந்த சிறுவனின் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது.

வேட்டையாடுவதில் தாத்தா கில்லாடி .கொடிய காட்டு மிருகங்களை கொஞ்சம் கூட பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள் .

தாத்தா கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறார்களே உங்களுக்கு பயமாக இருக்காதா என்று சிறுவன்அவரிடம் ஒரு முறை கேட்டேன். அடே பையா வேட்டைக்கு போவது அதற்கு தானே சிரித்தார் தாத்தா.

ஆமாம் வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்கு தான் .காடு என்பது பயங்கரமான பிரதேசம் எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ எதுவும் தெரியாது.

காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம் என்றாலும் ஏன் வேட்டையாடப் போகிறார்கள் எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம்.

மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால் அதில் என்ன பெரிய சந்தோஷமோ த்ரில்லோ இருக்கிறது எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும்.

அப்படி பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள் நெருக்கடிகள் வரும் தாக்குதல்கள் வரும் அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது.

என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே .செழிப்பாக ஓடும் என்று நினைத்து தொடங்கி வியாபாரம் இப்படி ஒரேயடியாக படுத்து விட்டது என்றெல்லாம் வருத்தப்படுவதில் அர்த்தமில்லை .

வேட்டைக்குப் போகும் யாரும் இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது இது நீதி இல்லை என்று சொன்னால் எடுபடுமா.

# வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள் .போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும்.


No comments